இந்தியா
4 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் இரத்து

4 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் இரத்து
பொறியியல் சார் பணிகள் காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 4 நாட்களுக்கு சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடப்பதால், மின்சார ரயில் சேவையில் இன்று (24) முதல் 28-ம் திகதி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே மட்டும் ரயில்கள் பகுதியாக இரத்து செய்யப்படுகின்றன.