உலகம்
பிலிப்பைன்சில் அதிக உஷ்ணம்!

பிலிப்பைன்சில் அதிக உஷ்ணம்!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்சின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 50 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.