Connect with us

இலங்கை

அத்துமீறிதலைத் தடுத்தால் தமிழர்களுக்குப் பேருதவி!

Published

on

Loading

அத்துமீறிதலைத் தடுத்தால் தமிழர்களுக்குப் பேருதவி!

இந்தியாவுக்கு அமைச்சர் பிமல் தெரிவிப்பு

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அதுவே வடக்கு மக்களுக்கு அவர்கள் வழங்கும் பெரும் சேவையாகவும், பேருதவியாகவும் அமையும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டபோது அதனைத் தடுப்பதற்குப் பெரும் பிரசாரங்களை ஆஸ்திரேலியா மேற்கொண்டது. சட்டமாக இருக்கட்டும், பிரச்சாரமாக இருக்கட்டும் உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

போர்க் காலத்தில் வடக்கு மக்கள் இந்தியா சென்றார்கள். இந்தியா அவர்களை பாதுகாத்தது. இதனை மதிக்கின்றோம். வடக்கில் தற்போது கடற்றொழில்தான் பிரதானமாக உள்ளது. எனவே, அதனை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்காமல் இருப்பதே வடக்கு மக்களுக்கு ஆற்றும் பெரும் சேவையென்பதை இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் கூறிக்கொள்கின்றேன்.

இந்தியாவில் உள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தலாம். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுத்து, வடக்கு மீனவர்களின் கடற்றொழிலை பாதுகாப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கான பெரும் உதவியாக அமையும். இந்தியாவால் இதனை செய்யமுடியும். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கினாலும் வடக்கு மக்களுக்காக இதனை செய்யவேண்டும். அப்போதே அந்த உதவிகளில் உண்மைத்தன்மை இருக்கும். – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன