Connect with us

இலங்கை

தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயரம்; சோகத்தில் கிராமம்

Published

on

Loading

தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயரம்; சோகத்தில் கிராமம்

  ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் 38 வயது தாயும் அவரது 05 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வடத்தில் சிக்கி தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது,

இதன்போது மின்சார வடத்தில் சிக்கியதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த தாய்க்கும் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன