Connect with us

இலங்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள்!

Published

on

Loading

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள்!

அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு ஈடுபட்டுள்ளனர்.

அனுராதபுரம் போதனா  மருத்துவமனையில் கடமையாற்றும் பெண்  மருத்துவரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்போது, சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 32வயதுடைய மருத்துவர் நேற்றையதினம் தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் மருத்துவர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன