இலங்கை
மகிழுந்தின் தானியங்கி ஜன்னலில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

மகிழுந்தின் தானியங்கி ஜன்னலில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் மகிழுந்தின் தானியங்கி ஜன்னலில் சிக்குண்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக வாங்கிய மகிழுந்துக்கு பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகிழுந்தை இயக்கியவுடன் தானியங்கி ஜன்னல் மூடியதால் வெளியில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்து ஜன்னலில் இறுகி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் , இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.