இலங்கை
பாடசாலை மாணவர்களின் செலவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவர்களின் செலவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட ஆறாயிரம் ரூபாய் பெறுமதியான செலவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவுச்சீட்டுகளின் கால எல்லையானது நாளைய தினத்துடன் நிறைவடையவிருந்தது.
இதன்படி, மாணவர்களின் சிரமங்களைக் கருத்திற் கொண்டு குறித்த கால எல்லையானது எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.