இலங்கை
ஹையேஸ் வாகனத்தில் மோதி குட்டி யானை உயிரிழப்பு

ஹையேஸ் வாகனத்தில் மோதி குட்டி யானை உயிரிழப்பு
நீர்கொழும்பு, யாழ்ப்பாண பிரதான வீதியை கடக்க முற்பட்ட யானைக் குட்டி ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் மோதி இறந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், வாகனத்தில் பயணித்தவர்கள் பாதிப்பு இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.
எனவே இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.