Connect with us

இலங்கை

மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து!

Published

on

Loading

மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீ அணைக்கும் படை, பிரதேச சமூக மட்ட அமைப்பினர், பிரதேச இளைஞர்கள் என பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலும், 

குறித்த தீ விபத்தில் வர்த்தக நிலையத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான அனைத்துப் பொருட்களும் தீயில் கருகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன