உலகம்
வடகொரியா மேலும் 3000 சிப்பாய்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது – தென்கொரியா குற்றச்சாட்டு!

வடகொரியா மேலும் 3000 சிப்பாய்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது – தென்கொரியா குற்றச்சாட்டு!
வடகொரியா மேலும் மூவாயிரம் சிப்பாய்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாகத் தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் மோதலுக்கு ஆதரவளிப்பதற்காகக் குறித்த சிப்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
வடகொரியாவிலிருந்து இதுவரை சுமார் 11 ஆயிரம் சிப்பாய்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வாறு அனுப்பப்பட்ட சிப்பாய்களில் இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் போரில் கொல்லப்பட்டதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.