இந்தியா
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் சாவு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் சாவு!
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரமொன்று வேருடன் குடைசாய்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த நிலையில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், குல்லு, மண்டி ஆகிய இடங்களில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.