சினிமா
தனுஷ் விவாகரத்து.. நடிகை நயன்தாரா செய்த செயல் படுவைரல்

தனுஷ் விவாகரத்து.. நடிகை நயன்தாரா செய்த செயல் படுவைரல்
தனுஷ் – நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தனுஷை சாடி நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.மேலும் தற்போது இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தான் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை, தன்னுடைய அனுமதி இல்லாமல் நயன்தாரா பயன்படுத்திவிட்டார் என வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ்.இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டாவில் கர்மா பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். “கர்மா என்ன சொல்கிறது என்றால்.. நீ பொய்களால் ஒருவரது வாழ்க்கையை அழித்தால், அதை கடனாக வைத்துக்கொள். அது வட்டியுடன் திரும்ப வரும்” என நயன்தாரா பதிவு செய்துள்ளார்.தனுஷுக்கு நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், அதை தாக்கி தான் நயன்தாரா பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.