Connect with us

இலங்கை

பச்சிளம் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய் ; இறுதியில் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

Published

on

Loading

பச்சிளம் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய் ; இறுதியில் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் – லாவண்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

அக்குழந்தை நேற்று  வீட்டின் அருகே உள்ள தண்ணீர் கோடாவில் இறந்த நிலையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த தம்பதியினர் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் 5 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து லாவண்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2 முகமூடி அணிந்த நபர்கள் அதிகாலை வீட்டிற்கு வந்ததாகவும், தன்னிடம் இருந்து தங்க நகைகளை பறித்துக்கொண்டு குழந்தையை தண்ணீர் கோடாவில் போட்டு சென்றதால் குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

லாவண்யாவின் வாக்குமூலம் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் லாவண்யா, அவரது தாயார் மற்றும் சகோதரியிடம்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

நடந்த விசாரணையில், தம்பதியர் பிரிந்திருந்த நிலையில் மன வேதனையில் லாவண்யா இருந்ததாகவும், அதன் காரணமாகவே 5 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்றதாகவும் லாவண்யாவின் தாயார் வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையை கொன்றதற்கு மன அழுத்தம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன