இலங்கை
தமிழர்களின் பகுதியில் சீனாவுக்கு இடமில்லை; செல்வம் எம்.பி. தெரிவிப்பு!

தமிழர்களின் பகுதியில் சீனாவுக்கு இடமில்லை; செல்வம் எம்.பி. தெரிவிப்பு!
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சரியானவையே. தமிழர் தாயகத்தில் சீனாவின் நடவடிக்கைகளை அனுமதிக்கப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தார். அவரின் விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த நடவடிக்கை சீனாவுக்கு வலிக்கும், அமெரிக்காவுக்கு வலிக்கும் என சீனாவின் அடிவருடிகள் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியாவே முதலில் உதவியது. எனவே, ஒப்பந்தங்கள் சரியானவை. அவற்றை சீன அடிவருடிகள் குழப்ப முற்பட்டால், நாம் அதனை எதிர்த்து நிற்போம். வடக்கு, கிழக்கில் சீனாவின் எந்தவொரு நடவடிக்கை இடம்பெறுவதையும் நாம் அனுமதிக்கமாட்டோம்’ – என்றார்.