இலங்கை
கடும் பாதுகாப்புடன் நீதிமன்ற வந்த தேசபந்து

கடும் பாதுகாப்புடன் நீதிமன்ற வந்த தேசபந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் , தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.