Connect with us

இலங்கை

திருடனுக்காக பொலிஸார் விரித்த வலை ; இறுதியில் அதிர்ச்சி கொடுத்த திருடன்

Published

on

Loading

திருடனுக்காக பொலிஸார் விரித்த வலை ; இறுதியில் அதிர்ச்சி கொடுத்த திருடன்

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

பியகம பொலிஸ்  பிரிவின் முதலீட்டு வலயப் பகுதியில் நேற்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Advertisement

வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடிய குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் திருடப்பட்ட சொத்துடன் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், பியகம, கிரிபத்கொட, கடுவெல, வெலிவேரிய மற்றும் அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து ஏராளமான சொத்துக்களைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

திருடப்பட்ட இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒரு கணினி, ஐந்து உருகிய தங்கக் கட்டிகள், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு சலவை இயந்திரம் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டி ஆகியவை பொலிஸாரினால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன