இலங்கை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை விசேட தரிசனம் ; குவியும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை விசேட தரிசனம் ; குவியும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த முதலாம் திகதி திறக்கப்பட்டது. மறுநாள் (2 ஆம் திகதி) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை (14 ஆம் திகதி) நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படவுள்ளது.
காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம். இதற்காக பக்தர்கள் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
வருகிற 18 ஆம் திகதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும் என்பதுடன் அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.