Connect with us

இலங்கை

எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் கோர விபத்து – 06 வயது சிறுமி பரிதாபமாக பலி!

Published

on

Loading

எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் கோர விபத்து – 06 வயது சிறுமி பரிதாபமாக பலி!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

Advertisement

 விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று சிறுமிகள் எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மீதமுள்ளவர்கள் எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

 உயிரிழந்த சிறுமி 6 வயதுடையவர் என்றும், அவர் குருந்துவத்த, பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

 விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744496757.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன