Connect with us

உலகம்

நைஜீரியாவில் விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு; 51 பேர் சாவு!

Published

on

Loading

நைஜீரியாவில் விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு; 51 பேர் சாவு!

நைஜீரியாவில் பாஸ்சா பகுதியில் விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதில் 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் வீடுகளும் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஞாயிற்றுக்கிழமை(13) கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று குறித்த துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.

Advertisement

விவசாய சமூகத்தினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர்கள் மேய்ப்பர்கள் என நம்பப்படும் சமூகத்தை சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் என்று கூறப்படுகிறது. 

அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி இவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன