இலங்கை
16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்த பஞ்சாப் அணி

16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்த பஞ்சாப் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 15 ஆவது ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை பெற்று கொல்கத்தா அணிக்கு 112 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 15 ஆவது ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.