இலங்கை
பெருந்தொகை கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு;

பெருந்தொகை கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு;
ஒருவர் கைதானார்
கிளிநொச்சி – புளியம்பொக்கணைப் பகுதியில் 85 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, மேற்படி கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பளைப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புளியம்பொக்கணைப் பகுதியில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.