Connect with us

இலங்கை

இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் சிக்கியது

Published

on

Loading

இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் சிக்கியது

இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 8 கோடி இந்திய ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்​பட்​டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்​த 32 வயதான நபர் போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக இந்திய மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு தகவல் கிடைத்​தது.

Advertisement

இதையடுத்​து, அவரை கடந்த ஒரு வார​மாக பொலிஸார் கண்​காணித்து வந்​தனர். இதனிடையே, அவர் புதுக்​கோட்டை வழி​யாக இலங்​கைக்கு படகு மூல​மாக போதைப்​பொருட்​களைக் கடத்தி செல்​ல​விருப்​ப​தாக தகவல் கிடைத்தது.

இந்​நிலை​யில், புதுக்கோட்டை மேல​விலக்​குடி​யில் இருந்த அலெக்ஸை இரு தினங்​களுக்கு முன் கைது செய்த மத்​திய போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு பொலிஸார், அவரிட​மிருந்த 950 கிராம் எடை​யுள்ள, இந்திய ரூபாயில் 8 கோடி மதிப்பிலான மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப் பொருளை​யும், இந்திய ரூ.2 லட்​சம் பணத்தையும் பறிமுதல் செய்​தனர்.

அதேவேளை கைதாகி​யுள்ள அலெக்ஸ் மீது பல்​வேறு மாநிலங்​களில் இருந்து இலங்​கைக்கு போதைப்​பொருள் கடத்​தி​யது தொடர்​பான வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​ப​தாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன