Connect with us

இலங்கை

1,300 மில்லியன் ரூபாவை ஈட்டிய இ.போ.ச

Published

on

Loading

1,300 மில்லியன் ரூபாவை ஈட்டிய இ.போ.ச

  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச் ஜயதிலக தெரிவித்தார்.

தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

தற்போது 24 மணிநேரமும் பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி தலதா மாளிகையின் ‘சிறி தலதா வழிபாட்டு’ நிகழ்வுக்காக செல்லும் மக்களின் நலன் கருதி விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கண்டி-கொழும்பு வீதியில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும், இந்த வருமானம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன