Connect with us

இலங்கை

விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம்

Published

on

Loading

விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம்

  இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு , அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என , நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் , ஐரோப்பிய ஒன்றியம், பிற மேற்கத்திய சக்திகளுடன் சேர்ந்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கடுமையான சட்டமாக மேற்கோள்காட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியுள்ளது.

Advertisement

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசாங்கத்துடனான சமீபத்திய சந்திப்புகளில், இதன் தடை குறித்தும்  பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது GSP (+) வர்த்தக வசதியைப் பெற இலங்கைக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வது ஒரு முன்நிபந்தனையாகும்.

  இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தடைக்காலம் குறித்து பரிசீலிக்குமா என்று வினவியபோது பதிலளித்த   நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,

Advertisement

அரசாங்கம் இன்னும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்றும் இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நீதி அமைச்சர்கூறினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன