Connect with us

சினிமா

நயன்தாரா பகிர்ந்த பழமொழி!

Published

on

Loading

நயன்தாரா பகிர்ந்த பழமொழி!

நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்கமால் காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார்.

Advertisement

நடிகை நயன்தாராவுக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தார்கள். சமீபத்தில் நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் தொடா்ந்த வழக்கில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “பொய்யின் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழித்தால் அது கடன்பெற்றதுபோல வட்டியுடன் உங்களை வந்தடையும்” என்ற பழமொழியைப் பகிர்ந்துள்ளார்.

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன