இலங்கை
ஒன்பதாவது மாடியில் வேலையிலிருந்த நபருக்கு நேர்ந்த விபரீதம் ; சோகத்தில் குடும்பம்

ஒன்பதாவது மாடியில் வேலையிலிருந்த நபருக்கு நேர்ந்த விபரீதம் ; சோகத்தில் குடும்பம்
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சார்லிமன் வீதி பகுதியில் அமைந்துள்ள பத்து மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவ, மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
விசாரணையில், உயிரிழந்தவர் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் சுவரில் நிறப்பூச்சு பூசிக்கொண்டிருந்தபோது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலுதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.