Connect with us

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொலை

Published

on

Loading

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொலை

தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பலஸ்தீனத்தின் காசாவை சேர்ந்த தீவிரவாத குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

Advertisement

இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக லெபானினிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் வடக்கு பகுதிமீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 மாதங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தெற்கு லெபனானின் பராச்சிட் பகுதிக்கான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அபு அலி ரிடா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆயினும் அவர் எப்போது கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன