Connect with us

இலங்கை

யாழில் அடங்காத மணல் மாபியாக்கள்; பிரதேச மக்கள் அச்சம்!

Published

on

Loading

யாழில் அடங்காத மணல் மாபியாக்கள்; பிரதேச மக்கள் அச்சம்!

   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ளமாக மணல் அகழ்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பிரதேச மக்கள் தெரிவிக்கையில் ,

Advertisement

கடந்த காலங்களில் மணல் திட்டிய பகுதிகளில் இருந்தே மணல் எடுத்துச் செல்லப்பட்டது.

 தற்போது கிராமப் பகுதிகளில் கட்டிட வேலைகள் அதிகரித்திருப்பதால், அனுமதி வழங்கப்படாத இடங்களிலும் மக்கள் குடியிருப்புகளின் நடுவே மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

இந்த நிலைமை தொடருமானால், இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் பெரும் நீர்த்தேக்கம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன