Connect with us

உலகம்

எத்தியோப்பியா நிலச்சரிவு – இதுவரை நேராத துயரம் ..!!!

Published

on

Loading

எத்தியோப்பியா நிலச்சரிவு – இதுவரை நேராத துயரம் ..!!!

 

229 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை …!

Advertisement

கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் இருக்கும் கோஃபா மண்டலத்தில் கடந்த ஜூலை 21-ம் திகதி அதிகனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மண்ணுக்குள் சிக்கினார்கள்.

அதை தொடர்ந்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலச்சரிவில் தற்போது வரை மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது. மேலும், 81 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் என்பதால் நிலச்சரிவுகள் வழக்கமாக ஏற்பட கூடியவைதான்.

Advertisement

அங்கு ஏற்கனவே ஏற்பட்ட சிறிய மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மக்களே, அதன்பிறகு ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆனால், இப்போது ஏற்பட்டிருக்க கூடிய நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியிருப்பது கோஃபாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது, மேலும் அங்கு தற்போது வரை தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மண் சரிவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை முதலில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் தற்போது இதில் 229 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் கனமழையால் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது தென்மேற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்பே வரலாறு காணாத ஒன்றாக பதிவாகி உள்ளது. [எ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன