Connect with us

விளையாட்டு

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தொடரும் தடை.. காரணம் இதுதான்!

Published

on

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தொடரும் தடை.. காரணம் இதுதான்!

Loading

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தொடரும் தடை.. காரணம் இதுதான்!

Advertisement

கடந்த மார்ச் 10ஆம் தேதி தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனைக்கு தனது மாதிரியை வழங்க மறுத்ததற்காக அப்போதே பஜ்ரங் புனியா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிராக அவர், ஊக்க மருந்து தடுப்பு ஒழுங்குமுறை குழுவிடம் மேல்முறையீடு செய்த நிலையில், செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து குழு பிறப்பித்த உத்தரவில், ஊக்கமருந்து சோதனையை வேண்டுமென்றே தவிர்த்தது விதி மீறலாகக் கருதப்படுவதாக கூறி, பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் தடையை தொடர்ந்து, உலக மல்யுத்த நிர்வாகக் குழுவும் பஜ்ரங் புனியாவை இடைநீக்கம் செய்தது.

இதனால், அவரால் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதோடு, வெளிநாடுகளில் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவும் முடியாது என தெரியவந்துள்ளது. சக மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துடன் காங்கிரஸில் இணைந்த பஜ்ரங் புனியா, அகில இந்திய காங்கிரஸின் விவசாயிகள் பிரிவு நிர்வாகியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன