வணிகம்
ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்திற்கு: ஜூன் முதல் அமலாகும் புதிய விதி!

ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்திற்கு: ஜூன் முதல் அமலாகும் புதிய விதி!
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தியதில் யு.பி.ஐ-க்கு முக்கியப் பங்கு உண்டு. யுனிபைட் பேமென்ட் இன்டர்பேஸ் எனும் இந்த அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் கூகுள் பே, போன்பே போன்றவை செயல்படுகின்றன. தற்போது பணத்தின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது. மக்கள் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பரிவர்த்தனைக்கும் டிஜிட்டல் பணம் செலுத்துகிறார்கள்.நாட்டில் தினமும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் UPI மூலம் பணம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு சில நொடிகளில் சென்றடைகிறது. ஆனால், பல நேரங்களில் மக்கள் தவறான நபர்களின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்.பி.சி.ஐ.) UPI தொடர்பான விதியை வெளியிட்டுள்ளது. இந்த விதி என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI ஒரு புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உங்கள் பணம் தவறான கைகளுக்குச் செல்லாது. UPI மூலம், P2P அதாவது Peer to Peer மற்றும் P2PM அதாவது Peer to Peer Merchant என்று உங்களுக்குச் சொல்லலாம். இப்போது எந்த வகையான பரிவர்த்தனையையும் செய்யும்போது, கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மட்டுமே தோன்றும், அது CBS அதாவது கோர் பேங்கிங் சிஸ்டத்தில் பதிவு செய்யப்படும். அதாவது பணம் செலுத்தும் போது, வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட பெயரை நீங்கள் காண்பீர்கள். அந்த நபரின் எண் உங்கள் தொலைபேசியில் வேறு பெயரில் சேமிக்கப்பட்டிருந்தாலும் கூட. சில நேரங்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்ட நபர்களால், குழப்பம் ஏற்படுகிறது, இதனால் பணம் தவறான கணக்குகளுக்குச் செல்கிறது. ஆனால் இப்போது இது நடக்காது. இந்த புதிய விதி ஜூன் 30, 2025 முதல் அனைத்து UPI பயன்பாடுகளுக்கும் செயல்படுத்தப்படும்.எளிமையாகச் சொன்னால், உங்கள் காண்டெக் லிஸ்டில் சேமித்த பெயரை விட்டுவிட்டு, பெறுநரின் உண்மையான பெயரை அவர்களின் வங்கி பதிவுகளில் தோன்றும். நீங்கள் செய்யும் விஷசம் அதனை உறுதிப்படுத்திவிட்டு பணம் அனுப்புவதுதான். பணம் சரியான நபருக்கு செல்கிறதா என்பதையும் நீங்கள் சரிபார்க்க முடியும் என்பதை இந்த அம்சம் உறுதி செய்கிறது.