Connect with us

இலங்கை

நாட்டில் இதுவரை பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

Loading

நாட்டில் இதுவரை பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இந்த ஆண்டில் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்த சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தூண்டுதலால் நடந்தவை என இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்தார்.

Advertisement

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தூண்டுதலால் நடந்த 31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 41 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 27 பிஸ்டல் வகை துப்பாக்கிகள் எனவும், மீதி 14 ம், டி-56 ரக துப்பாக்கிகள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன