இலங்கை
இரத்த வாந்தி; குடும்பத்தலைவர் சாவு!

இரத்த வாந்தி; குடும்பத்தலைவர் சாவு!
மூச்சுவிடச் சிரமப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், இரத்த வாந்தியெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல் வன் (வயது – 42) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்றுக்காலை 5 மணியளவில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அவர் இரத்த வாந்தி எடுத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத் துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நண்பகல் ஒரு மணியளவில் சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.