இலங்கை
நோயை குணப்படுத்த சென்ற சிறுமியை சீரழித்த பிக்கு

நோயை குணப்படுத்த சென்ற சிறுமியை சீரழித்த பிக்கு
நோயை குணப்படுத்த சென்ற 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பிக்கு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு தாங்காமுடியாத அரிப்பு மற்றும் வயிறு கோளாறு காரணமாக, சிறுமி தன்னுடைய தந்தையுடன் கடந்த 18 ஆம் திகதியன்று விஹாரைக்கு சென்று பிக்குவை சந்தித்துள்ளனர்.
அன்றைய தினம் ஏதோ மந்திரம் செய்த பிக்கு, மறுநாள் வருமாறு கூறி, வரும்போது, வெட்டிய தேசிக்காயையும் எடுத்துவருமாறு, தேசிக்காயையும் கொடுத்து அனுப்பியுள்ளார் .
மறுநாளும் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு தந்தை, விஹாரைக்கு சென்றுள்ளார்.
இருவரையும் அமர சொன்ன பிக்கு, தேசிக்காயை வெட்டி வழிந்தோடும் நீரில் வீசி விட்டு வருமாறு தந்தையிடம் கூறியுள்ளார்.
பிக்கு கூறியதை அடுத்து, தேசிக்காயை எடுத்துக்கொண்டு, விஹாரையில் இருந்து தந்தை வெளியே சென்றபோது, சிறுமியை பிக்கு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
தந்தை திரும்பி வந்தபின் வீட்டுக்கு வரும் வழியில் தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த தந்தை சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் பிக்கு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி,வைத்திய பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.