இலங்கை
யாழில் மயக்கமடைந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

யாழில் மயக்கமடைந்த யுவதிக்கு நேர்ந்த கதி!
யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்ட பின் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இந்தநிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை
உயிரிழந்துள்ளார்.
8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடு
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.[ஒ]