இலங்கை
யாழில் ஆலய உண்டியலுடன் மோதி முதியவர் உயிரிழப்பு!

யாழில் ஆலய உண்டியலுடன் மோதி முதியவர் உயிரிழப்பு!
யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய வைத்திலிங்கம் சிவராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சிமெந்தினாலான உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,
பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.[ஒ]