உலகம்
உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யா மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் அதி நவீன போர் விமானங்களை உக்ரைன் தாக்கியழித்தமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரஷ்யா இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும்
உக்ரைன் தலை நகரையும் உக்ரைனின் மேற்குகில் உள்ள நகரமொன்றையும்,வடமேற்கில் உள்ள நகரங்களையும் ரஷ்யா தாக்கியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனின் பயங்கரவாத தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதுடன் உக்ரைனின் இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது.
மிகவும் துல்லியமாக தாக்க கூடிய நீண்டதூரம் செல்லும் வான் தலை கடல் ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.[ஒ]