Connect with us

டி.வி

கடத்தியவனை வரைந்து காட்டும் கனி; வீட்டை பூட்டிவிட்டு சென்ற கணவன்; உண்மை தெரியவருமா?

Published

on

zee tamil Kd and km and

Loading

கடத்தியவனை வரைந்து காட்டும் கனி; வீட்டை பூட்டிவிட்டு சென்ற கணவன்; உண்மை தெரியவருமா?

ஸ்வாதியை அவமானப்படுத்த நடக்கும் திட்டம்.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி வெளிநாடு போக முடியாமல் திரும்பி வந்த நிலையில் இன்று, முத்துபாண்டியும் சிவாண்டியும் சேர்ந்து ஏற்பாடு செய்த பெண் சுவாதியை சந்தித்து ஒரு ஹோட்டலில் ம்யூசிக் டைரக்டர் இன்டெர்வியூ ஏற்பாடு பண்ணி இருக்காரு, நீ போய் அட்டென்ட் பண்ணி பாரு என்று சொல்கிறாள்.இங்கே ஒரு இன்டெர்வியூ நடப்பது போல் செட்டப் செய்து வைக்கின்றனர். ஸ்வாதி வந்ததும் அவளை விபச்சார வழக்கில், சிக்க வைக்க திட்டமிடுகின்றனர். விஷயம் அறியாத ஸ்வாதி ஹோட்டலுக்கு கிளம்பி வர அவளது தோழி ரேவதிக்கு போன் செய்து சுவாதி காலேஜ் வரல போனும் எடுக்கல என்னாச்சு என்று விசாரிக்கிறாள். உடனே ரேவதி கார்த்தியிடம் விஷயத்தை சொல்ல அவனுக்குள் ஏதோ சந்தேகம் உருவாகிறது.நேற்று ஸ்வாதி வைத்திருந்த விசிட்டிங் கார்டில் என்ன அட்ரஸ் இருந்தது என்று விசாரித்து அந்த ஹோட்டலுக்கு கிளம்பி வருகிறான். ஸ்வாதி இந்த ஹோட்டலுக்கு வந்து விசாரித்து ரூமிற்கு வருகிறாள். அவளுக்கு ஜூஸ் கொடுக்க அதை குடித்த ஸ்வாதி மயங்கி விழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வைஜயந்தியின் ஆட்கள் கனியை கடத்தி சென்ற நிலையில் இன்று, சண்முகம் கனியை கடத்தி செல்லும் வண்டியை மடக்கி பிடிக்க ரவுடிகள் கனியை இறக்கி விட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர். பிறகு கனியிடம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.. உன்னை கடத்தினவங்களில் ஒருத்தனையாவது நியாபகம் இருக்கா? அதை அப்படியே வரைந்து கொடு, மத்ததை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான். இதனை தொடர்ந்து சண்முகம் கனியுடன் கோவிலுக்கு வர பரணி இனிமே நீ கோபமே படக்கூடாது என்று சொல்லி மாலையை போட்டு விட சண்முகம் என் குடும்பத்து மேல யார் கைய வச்சாலும் சம்மாரம் பண்ணாமல் விட மாட்டேன் என்று சொல்லி கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்கிறான். இதனால் பரணி ஷாக் ஆகிறாள். பிறகு கனி நைட் தனியாக உட்கார்ந்து தன்னை கடத்தியவனை வரைந்து கொடுக்க சண்முகம் அந்த போட்டோவுடன் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவனை சந்தித்து உதவி கேட்கிறான், அவர் பட்டப்பகலில் ஒருத்தன் கடத்தி இருக்கான் என்றால் அவன் கண்டிப்பா ஏற்கனவே கேஸ்ல மாட்டி இருப்பான். எஃப்.ஐ.ஆர்  பைல்களை செக் பண்ணா கண்டு பிடித்து விடலாம் என்று சொல்கிறான்.அடுத்து சண்முகம் முத்துபாண்டியை சந்தித்து விஷயத்தை சொல்ல அவன் என்னுடைய ஸ்டேஷன்ல இருக்க பைல்களை பார்க்கிறது பிரச்சனை இல்ல.. ஆனால் இந்த மாவட்டம் முழுக்க பார்க்கணும், அதுக்கு அதிகாரி வைஜெயந்தி மேடம் தான் மனசு வைக்கணும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்னஎன்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துளசியின் தாலியை கண்ட அஞ்சலி.. மகேஷின் சுய ரூபம் குறித்து வெளிவரும் உண்மை – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் தியா பொம்மைகளை மாற்றி மாற்றி வைக்க மகேஷ் டென்ஷன் ஆன நிலையில் இன்று, மகேஷ் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு பொம்மைகளை எல்லாம் இடமாற்றி வைக்கக் கூடாது நான் உனக்கு வேறு பொம்மைகளை வாங்கி தரேன் என்று சொல்லி புரிய வைக்கிறான்.இதனைத் தொடர்ந்து துளசி தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளது கழுத்தில் இருக்கும் தாலியை அஞ்சலி பார்த்து விடுகிறாள். அடுத்த நாள் காலையில் தியாவை கூட்டிட்டு அம்மா கழுத்துல இருக்க தாலி பற்றி கேட்க தியா அது தாலி தான் அம்மா அத பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. நான் உங்ககிட்ட சொன்னது அம்மா கிட்ட சொல்லிடாதீங்க என்று சொல்கிறாள். மறுபக்கம் துளசிக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கல்யாணத்தை சீக்கிரம் வையுங்கள் என்று பிரஷர் கொடுத்துவிட்டு செல்கிறான். பிறகு துளசியிடம் நீ என்கிட்ட சின்ன வயசுல இருந்து எதையுமே மறைக்க மாட்ட. அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தை ஏன் சொல்லல என்று கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டியா என்று கேட்க துளசி அதிர்ச்சி அடைகிறாள்.இந்த தாலி கழுத்தில் எப்படி வந்தது என்ற மொத்த கதையையும் துளசி சொன்னதும் அஞ்சலி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இதுக்கு காரணமான கண்டுபிடிச்சு தண்டனை வாங்கி கொடுக்காமல் விடமாட்டேன் என்று சொல்கிறாள். அடுத்ததாக கவின் நீங்க தானப்பா நிலத்தை கொடுக்குறதா சொன்னிங்க இப்ப எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க என்று கேட்க லட்சுமி கையெழுத்து போட வேண்டும் என்று உண்மையை சொல்ல முடியாத வரதராஜன் எனக்கு விருப்பமில்லை என உறுதியாக சொல்லி விடுகிறார்.கோகிலா உங்களுக்கு லட்சுமியோட கையெழுத்து தானே வேணும். நான் வாங்கி தரேன் என்று சொல்லி லட்சுமி வீட்டுக்கு கிளம்பி வருகிறாள். வீட்டில் ரகுராம் ஆகியோர் இருக்க லட்சுமி தன்னுடைய தோழி போல கோகிலாவை வரவேற்று அறிமுகம் செய்து பிறகு கோவிலில் காத்திருக்க சொல்கிறாள். இங்கே துளசி சாப்பிட்டு பக்கத்துல எங்கயாச்சும் ஷாப்பிங் போயிட்டு வரலாம் என்று சொல்கிறாள். பிறகு கதவை திறக்க முயற்சி செய்ய கதவு லாக்காகி இருக்க அஞ்சலி அவர் பூட்டிட்டு போயிருப்பாரு ஆபீஸ் முடிஞ்சு வந்து தான் திறப்பாரு என்று சொல்கிறான்.இதை கேட்ட துளசி, தினமும் இப்படித்தானா என்று கேட்டு துளசி அதிர்ச்சி அடைகிறாள். மேலும் வேற என்ன எல்லாம் பண்றாரு என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன