Connect with us

இலங்கை

செம்மணி அகழ்வுகள் தொடர அரசு ஒத்துழைக்கவேண்டும்! எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்து

Published

on

Loading

செம்மணி அகழ்வுகள் தொடர அரசு ஒத்துழைக்கவேண்டும்! எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்து

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடரவேண்டும். அரசாங்கம் உண்மைகளைக் கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கவேண்டும் என்று ஜனாதி பதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
செம்மணி மனிதப்புதைகுழி அகழப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வெளியாகியிருந்தன. கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இறுதித் தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையிலேயே செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன. 

Advertisement

அகழ்வுப்பணிகள் நிறைவடைவதற்கு முன்னதாகவே அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப் பின்னர் பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந் தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் உள்ளன என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 
செம்மணிப் புதைகுழி அகழ்வுப்பணிகளை நிதியைக் காரணம் காட்டியோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ இடைநிறுத்தக்கூடாது.

அகழ்வுப்பணிகளுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கவேண்டும். செம்மணிப்புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளிலும் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க வேண்டும். உண்மைகள் கண்டறியப்படவேண்டும் – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன