Connect with us

இலங்கை

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்; மிரளும் உலக நாடுகள்

Published

on

Loading

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்; மிரளும் உலக நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

இந் நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

Advertisement

சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர்,பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Advertisement

இஸ்ரேலின் பைட்டர் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பதுங்குகுழிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதனால் மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன