உலகம்
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதல்; புதிய அரசியற்கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் மஸ்க்

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதல்; புதிய அரசியற்கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் மஸ்க்
உலகப் பணக்காரரான எலான் மஸ்க், ‘தி அமெரிக் கன் பார்ட்டி’ என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அரச நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகியிருந்தார். இதன் பின்னர் எலான் மஸ்க்கிற்கும், ட்ரம்புக்கும் இடையில் வார்த்தை மோதல்கள் வலுப்பெற்றிருந்தன. இவ்வாறான பின்னணியிலேயே, ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெய ரில் புதிய அரசியற்கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் புதிய அரசியற்கட்சி தேவையா’ என்று சமூக வலைத்தளத்தில் எலான் மஸ்க் வாக்கெ டுப்பை நடத்தியிருந்தார். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 80 வீதத்தினர் புதிய கட்சியொன்று தேவை’ என்று தெரிவித்ததைத் தொடர்ந்தே, தனது கட்சி தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க் பிறப்பால் ஒரு தென்னாபிரிக்கர் எனவே, அவருடைய ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ ஆட்சி யைப் பிடித்தாலும் எலான் மஸ்க்கால் அதிபராக முடி யாது என்பது குறிப்பிடத்தக்கது.