இலங்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கால்நடை சேவைகள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கால்நடை சேவைகள் பாதிப்பு!
கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரச கால்நடை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை மருத்துவர்கள் இன்று காலை 6.00 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். .
இதன்காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி நான்கு கால்நடை மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை மருத்துவர்கள் சமூகம் அளிக்காமையால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.[ஒ]