இந்தியா
ஏர்-இந்தியா விமானம் விமான விபத்து!

ஏர்-இந்தியா விமானம் விமான விபத்து!
லண்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எயர்இன்டியா விமானம் சற்று முன்னர் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு அருகில் விழுந்துநொருங்கியுள்ளது. இந்த விமானத்தில் 242 பயணித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.
குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள மேகானிநகர் என்ற பகுதியில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.
அந்த பகுதியிலிருந்து பெரும் கரும்புகை வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
அம்புலன்ஸ்கள் உட்பட அவசரசேவை பிரிவினர் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் மீட்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விபத்தில் 242 பயணிகள் பயணித்தனர் விமானம் லண்டனை நோக்கி சென்றுகொண்டிருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.