Connect with us

சினிமா

விஜயகாந்த் கம்பேக்..! ‘படை தலைவன்’ படத்திலுள்ள சப்பிறைஸ்.. என்ன தெரியுமா.?

Published

on

Loading

விஜயகாந்த் கம்பேக்..! ‘படை தலைவன்’ படத்திலுள்ள சப்பிறைஸ்.. என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா வரலாற்றில் தனது தனித்துவமான பாணியால் மக்கள் நினைவில் பதிந்தவர் ‘கேப்டன்’ விஜயகாந்த். அவரது வீர சாகச காட்சிகள், உணர்ச்சி மிக்க உரையாடல்கள், சமூக நீதிக்கு அடித்தளம் போட்ட கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் மனதில் ஓர் அசையாத இடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில், அவர் மறைவுக்குப் பின் அவரது திரைநடிப்பை மீண்டும் ஒரு முறை தமிழ்த் திரையுலகம் “படை தலைவன்” என்ற திரைப்படத்தின் மூலம் காணவுள்ளது. ‘படை தலைவன்’ திரைப்படத்தில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் மூலம், மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் திரையில் உயிருடன் காணப்படுகின்றார்.இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது. நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் விஜயகாந்தின் முகம், குரல், நடை என அனைத்தையும் இயந்திரங்களின் உதவியால் உருவாக்கியுள்ளனர்.விஜயகாந்தின் மகனின் நடிப்பில் உருவான இப்படம் ஜூன் 13ம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது அவரது மறைவுக்குப் பின் வெளியாகும் திரைப்பட ரிலீஸ் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.விஜயகாந்தின் வாழ்க்கைத் துணை மற்றும் அரசியலில் துணைவாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், சமூக ஊடகங்களில், “அனைவரும் ‘படை தலைவன்’ படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன