Connect with us

இலங்கை

போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கையை வலியுறுத்துங்கள்

Published

on

Loading

போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கையை வலியுறுத்துங்கள்

ஜேர்மனியிடம் கோரிக்கை!!

போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை ஜேர்மனி வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மூன்று நாள்கள் பயணமாக ஜேர்மனிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தி வருகின்றார். இவ்வாறான பின்னணியிலேயே, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையைப் பொறுப் பேற்கச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜேர்மனிக்கான இயக்குநர் பிலிப்ரிஷ் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம், இலங்கையின் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாகத் தெரியவில்லை. முன்னைய அரசாங்கங்கள் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் அதிகாரிகளைப் பாதுகாத்தன. தற்போதைய அரசாங்கமும் அதையே செய்து வருகின்றது.
இலங்கையர்களை ஒன்றிணைத்து, ஒரு நாடாக முன்னேறிச் செல்லும் வகையிலேயே ஜனாதிபதியாக அநுர தெரிவு செய்யப்பட்டார். ஆனால், நாடாளுமன் றத்தில் பெரும்பான்மைப்பலம் உள்ள போதிலும் அநுரவின் அரசாங்கம் எந்தவொரு நீண்டகாலப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணவில்லை.

இலங்கை அரசாங்க நிறுவனங்கள் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடுகளைக் காட்டிவருகின்றன. பல காரணங்களை முன்வைத்து நிலங்களை அபகரிக்கின் றன. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் பாதுகாப்புப் படையினரும் பல – இந்து ஆலயங்களைக் கைப்பற்றி அவற்றை பௌத்த ஆலயங்களாக மாற்றியுள்ளனர் – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன