Connect with us

இலங்கை

முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

Published

on

Loading

முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முகக்கவசம் அணிய வேண்டும் என  கொழும்பு சிறுவர் மருத்துவமனையின் சிறுவர் நல மருத்துவயர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது,  ​​நாள் பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முக கசவம் அணிவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிக்கன்குன்யா மற்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால், முதல் சில நாட்களில் அனைவரும் நுளம்பு  வலையைப் பயன்படுத்துவது முக்கியம் எனவும் இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவது  தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பாடசாலை அல்லது வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு அல்லது வெளியில் சென்ற பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவுவது முக்கியம் எனவும்  உங்கள் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொரோனா வைரஸின் திரிபு உருவாகும் போக்கு காணப்படுவதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன