Connect with us

இலங்கை

பொய்யுரைப்பது யார் என்பதை காலம் நிச்சயம் வெளிப்படுத்தும்; நாமல் ராஜபக்ச தெரிவிப்பு தெரிவிப்பு!

Published

on

Loading

பொய்யுரைப்பது யார் என்பதை காலம் நிச்சயம் வெளிப்படுத்தும்; நாமல் ராஜபக்ச தெரிவிப்பு தெரிவிப்பு!

பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்தது யாரென்ற கேள்விக்குரிய பதிலை காலம் நிச்சயம் வழங்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் நாமல் ராஜபக்சவுக்கும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதி அமைச்சரின் உரையொன்று தொடர்பில் நாமல் ராஜபக்ச விமர்சனங்களை முன்வைக்க முற்பட்ட வேளையே வாக்குவாதம் ஏற்பட்டது. “எடிட் செய்யப்பட்ட காணொலியை வைத்துக் கொண்டு கதைக்கவேண்டாம். தேவையென்றால் முழுமையான வீடியோவை அனுப்புகின்றேன். பொய்யுரைத்து சேறு பூசவேண்டாம்” என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டார். 

“நீதி அமைச்சர் பொறுப்புடன் உரையாற்றவேண்டும். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில்தான் தொழில்செய்தார். எனவே, நீதித்துறை தொடர்பில் அவர் தவறான கருத்தை வெளியிட்டால் அதனை சுட்டிக்காட்டும் பொறுப்பு எமக்கு உள்ளது.”என்று நாமல் பதிலளித்தார். பொய்யுரைக்கவேண்டாம் என நீதி அமைச்சர் மீண்டும், மீண்டும் வலியுறுத்தினார். “பொய்யுரைப்பது நாமா, நீங்களா என்பதை காலம் நிரூபிக்கும்” என்று நாமல் குறிப்பிட்டார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன