Connect with us

இலங்கை

இலஞ்சம், ஊழலற்ற அரச சேவைக்கு பிரதமர் அலுவலக உள்ளக விவகார பிரிவு ஸ்தாபிப்பு!

Published

on

Loading

இலஞ்சம், ஊழலற்ற அரச சேவைக்கு பிரதமர் அலுவலக உள்ளக விவகார பிரிவு ஸ்தாபிப்பு!

ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட PS/SB/Circular/2/2025 சுற்றுநிரூபத்திற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவை ஸ்தாபிக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில்  நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவின் பிரதானியாக மேலதிக செயலாளர்  ருவன் ஜயசுந்தர, ஒருங்கிணைப்பு  அதிகாரியாக நிர்வாக அதிகாரி கே.ஏ.எஸ்.ஸ்ரீபாலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

அதிகாரிகளின் நேர்மையை உறுதிப்படுத்தி, இலஞ்சம் மற்றும் ஊழலற்ற அரச சேவையை இலங்கைக்குள் உருவாக்குவதன் அத்தியாவசிய முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் முக்கிய கவனத்தை செலுத்தி அரச பிரிவிற்குள் பலம்வாய்ந்த ஊழல் எதிர்ப்பு வழிகளை அறிமுகப்படுத்தல், அரசியல் யாப்பின் 156வது சரத்தின் கீழ் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பேரவை (UNCAC)  உள்ளிட்ட ஏனைய ஊழல் எதிர்ப்பு சர்வதேச பேரவையின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தல், 2023ம் ஆண்டின் இலக்கம் 9ல் குறிப்பிடப்படும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்பு தேசிய செயற்பாட்டு திட்டம் (2025-2029) என்பவற்றிற்காக உள்ளக விவகார பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரச பிரிவிற்குள் ஊழல் தடுப்பு செயற்பாடுகளின் பிரதான முயற்சியாக அரச பிரிவு முழுவதும் வெளிப்படைத்தன்மை,  பொறுப்புக் கூறல், மற்றும் நேர்மையை  ஊக்குவிக்கும் கலாசாரத்தை உருவாக்கி, அனைத்து பிரஜைகளுக்கும் பயன்மிக்க அரச சேவையை வழங்குதல் என்பதே இதன் நோக்கமாகும். 

நிறுவனத்திற்குள் ஊழலை தடுத்தல் மற்றும் நேர்மையான கலாசாரத்தை மேம்படுத்தல், நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை என்பவற்றை உறுதிப்படுத்துவதுடன் நிறுவன செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பிலான தகவல்களில் பொதுமக்களின் பங்களிப்பை உறுதிசெய்தல், நிறுவனத்திற்குள் நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்தல், தவறான நடத்தைகளை அறிக்கையிடுவதை ஊக்குவித்தல், தகவல்களை வெளியிடுவோரை பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையை பேணுவதற்கென பாதுகாப்பான அணுகல் செயன்முறையை உருவாக்குதல், நீதியை நிலைநாட்டும் நிறுவனங்கள் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுடன் இணைந்து நீதியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

பிரதமர் அலவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள், யோசனைகள், குற்றச்சாட்டுக்கள் என்பவற்றிற்கென இரண்டு முறைப்பாட்டு பெட்டிகள் அலரி மாளிகை மற்றும் சிறிமதிபாயவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக 071113098 என்ற வட்ஸ்அப் இலக்கம், அல்லது 0114354754 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது iau@pmoffice.gov.lk  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன