இலங்கை
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும்
சந்தேக நபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் தெரியவருகிறது.
இது தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.[ஒ]