இலங்கை
நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்!

நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்!
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் பிரதான வீதியிலுள்ள நான்கு கடைகள் நேற்று அதிகாலை இனந்தெரியாத திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மூன்று நகைக்கடைகளும்,ஒரு பான்சிக் கடையும் உடைக்கப்பட்டுள்ளதாகவும்
இத்திருட்டில் நகைக்கடைகளிலிருந்து வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதோடு பான்சிக் கடையிலிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாகவும்
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]